அமெரிக்காவில் கொரோனா புதிய உச்சம்! ஒரே நாளில் 30,000க்கும் மேல் பாதிப்பு

அமெரிக்காவில் கொரோனா புதிய உச்சம்! ஒரே நாளில் 30,000க்கும் மேல் பாதிப்பு

அமெரிக்காவில் மீண்டும் நகரங்கள் திறக்கப்படுவதையடுத்து கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் ஒரே நாளில் உச்சம் தொட்டுள்ளது. அந்த வகையில் நேற்று மட்டும் அமெரிக்காவில் 34,700 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அரிசோனா, கலிபோர்னியா, மிசிசிபி, நெவாடா, டெக்சாஸ் ஆகிய நகரங்களில் புதிதாக தொற்றுக்கள் அதிகமாகியுள்ளன. புளோரிடாவில் மட்டும் ஒரேநாளில் 5,500 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகியுள்ளது.

கொரோனா பாதிப்பு ஒரேநாளில் அதிகரித்ததை அடுத்து முதலீட்டாளர்கள் தயக்கத்தினால் பங்குச்சந்தை சரிவு கண்டன. புதிய கொரோன தொற்றுக்கள் 2 வாரங்களில் மும்மடங்கு அதிகரித்துள்ளது