பொதுப்போக்குவரத்து சேவைகளில் திடீர் சோதனை: முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு நேர்ந்த கதி!
வவுனியாவில் பொதுப்போக்குவரத்து சேவைகளில் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் சுகாதார வழிமுறைகள் தொடர்பில் இன்று திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கொரோனா தொற்று காரணமாக பொதுப்போக்குவரத்து சேவைகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பயணிகள் மற்றும் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர்கள் கட்டுப்பாட்டை மீறிச் செயற்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வவுனியாவில் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் இணைந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதன்போது பேருந்துகள், புகையிரதங்கள் என்பன சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. இச்சோதனையின் போது முகக்கவசம் அணியாமல் சென்ற பயணிகள் பேருந்து மற்றும் புகையிரதங்களில் இருந்து இறக்கிவிடப்பட்டதுடன் போக்குவரத்து அனுமதி பத்திரங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.