கொழும்பின் பல பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு

எதிர்வரும் சனிக்கிழமை (27) கொழும்பின் பல பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்து்ளளது.

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் குறித்த சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சனிக்கழமை இரவு 10 மணி தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணிவரையில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, கொழும்பு 13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகத் தடை இடம்பெறவுள்ளதோடு கொழும்பு 1,11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.