
கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மேலும் 40 பேர்
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1602ஆக அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து புதிதாக 40 பேர் பூரண குணமடைந்ததை தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.