ஐக்கிய தேசிய கட்சி தற்போது இரண்டாக பிளவுபட்டுள்ளது- பிரதமர்
ஐக்கிய தேசிய கட்சி தற்போது பிளவுப்பட்டுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குளியாபிட்டி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
அந்த இரண்டு தரப்பையும் சேர்ந்தவர்கள் இன்று ஒருவருக்கொருவர் தூற்றிக் கொள்கின்றனர். அத்துடன் அந்த கட்சியை சார்ந்த சிலர் சட்டவிரோத மதுபான உற்பத்தி உள்ளிட்ட பல நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
எனவே அவ்வாறானவர்கள் தொடர்பில் பொதுமக்களுடன் விழிப்புடன் செயலாற்ற வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பௌத்த தேரர்களின் கௌரவத்தை பாதுகாத்து தேர்தலில் போட்டியிடுவது ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கை என அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பெல்லன்வில ரஜமகா விகாரையில் இடம்பெற்ற வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர், மக்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
பௌத்த பிக்குகளுக்கு மதிப்பளித்து தேர்தலுக்கு முகங்கொடுப்பதே ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையாகவுள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தம்முடன் சிறந்த அங்கத்தவர்கள் இணைந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அம்பலாங்கொடையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.
பொருளாதாரம் தொடர்பில் அடிப்படை அறிவு அற்றவர்களே இன்று அரசாங்கத்தை நடத்திச் செல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மாற்று தலைமை வேண்டும் என்ற கோரிக்கை தமிழ் மக்கள் மத்தியில் தற்போது இல்லை என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அரசாங்கம் தற்போது வீழ்ச்சி பாதையில் சென்று கொண்டிருப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேஷன் கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து தெரிவித்தார்.
இதேவேளை, அம்பாறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியூதீன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.