
கொழும்பு மாவட்டத்தில் தபால் விநியோகம் தாமதம்!
தற்போது நிலவுகின்ற கொரோனா தொற்று காரணமாக தபால் ரயில் சேவைகளை பயன்படுத்தாது தபால் வாகனங்களை மாத்திரம் பயன்படுத்தப்பட்டு வருவதால் தபால் விநியோகிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தபாலதிபர் ரஞ்சித் ஆாியரத்ன தொிவித்துள்ளார்.
சுகாதார விதிமுறைகளுக்கமைய தபால் சேவை ஊழியர்களை ஈடுபடுத்துவது மட்டுமன்றி தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் ஊழியர்களை தொழில் ஸ்தானங்களுக்கு அழைத்து வருவதற்கு இயலாமை போன்ற காரணங்களாலும் இத்தாமதம் ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.
இதனால் கொழும்பு பிரதேசங்களுக்கான தபால் சேவை 2 நாட்கள் தாமதமாகுமென தபாலதிபர் தொிவித்துள்ளார்