திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி...! படங்கள் உள்ளே
பதுளை-மஹியங்கனை பிரதான வீதியின் மீகாகிவுல பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. குறித்த விபத்து இன்று பிற்பகல் 1 மணியளவில் இடம்பெற்றதாக எமது நிரூபர் தெரிவித்தார்.
தீ பரவல் ஏற்ப்படுவதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். முச்சக்கர வண்டியின் சாரதியும் பிரதேசவாசிகளும் ஒன்றினைந்து குறித்த தீயை கட்டப்படுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

