உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகள்..!

உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகள்..!

உக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகளுக்கான காட்சி காண் நடவடிக்கைகளை முன்னிட்டு இன்று பிற்பகல் 1.00 மணிமுதல் சில சுற்றுலா பகுதிகளை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகள் கடந்த 28 ஆம் திகதி இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர் என்பதோடு, இன்றைய தினம் குறித்த சுற்றுலா குழுவினர் பொலநறுவைக்கு சுற்றுலா செல்லவுள்ளனர்.

பொலன்னறுவை சுற்றுலா பகுதிகளான பராக்கிரமபாகு மாளிகை, தளதா முற்றம், சிவன் ஆலயம் இல - 02, ரண்கொன் வெஹெர, லங்கா திலக்க விகாரை, கிரி விஹாரை மற்றும் கல் விகாரை ஆகிய பகுதிகளுக்கு இன்றைய தினம் உக்ரைன் சுற்றுலா குழுவினர் பயணங்களை மேற்கொள்கின்றனர்.

குறித்த பகுதிகளுக்கு செல்ல உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் நாளைய தினம்(05) இவர்கள் சீகிரியாவிற்கு செல்லவுள்ளமையினால் நாளை நண்பகல் 12 மணி முதல் அங்கு உள்நாட்டு பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படும் எனவும் மத்திய கலாசார நிதியம் அறிவித்துள்ளது.