கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்கள் இந்திய காவல் படையினரால் மீட்பு!

கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்கள் இந்திய காவல் படையினரால் மீட்பு!

படகு பழுதடைந்தமை காரணமாக இந்தியாவின் புஸ்பவனம் கடற்பகுதியில் தத்தளித்துக்கொண்டிருந்த 3 இலங்கை மீனவர்கள் இந்திய கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்ற படகின் வெளியிணைப்பு இயந்திரம் பழுதடைந்த நிலையில், அந்தப் படகு திசைமாறி இந்தியாவின் புஸ்பவனம் கடற்பகுதியில் கரை ஒதுங்கியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதன்போது யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களே மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இலங்கை மீனவர்களின் படகையும் இந்திய பாதுகாப்பு தரப்பினர் கைப்பற்றியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.