ஊரடங்கு தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்! ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவல்

ஊரடங்கு தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்! ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவல்

இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து நீடிப்பதா, நீக்குவதா என்பது குறித்து சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமையவே தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் மொஹான் கருணாரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையிலும் அதிகரித்ததைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் முதல் கட்டம் கட்டமாக மற்றும் தளர்வுகளுடனான ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த மே மாதம் வரையில் நாட்டில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வந்த நிலையில், அண்மைக்காலமாக இரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணிவரையில் மாத்திரம் ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், நாட்டில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2001 ஆக அதிகரித்துள்ள போதிலும் இந்த தொற்று மக்கள் மத்தியில் பரவுகின்றமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.