மருத்துவமனையில் தீவிபத்து- 10 குழந்தைகள் பலி

மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தது.


மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலை 2 மணிக்கு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 10 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தது.

 

பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை பிரிவில் அதிகாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டன.

 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.