நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா மரணங்கள்..! நேற்றைய தினமும் 4 கொவிட் மரணங்கள் பதிவு

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா மரணங்கள்..! நேற்றைய தினமும் 4 கொவிட் மரணங்கள் பதிவு

நாட்டில் கொவிட் 19 மரணங்களின் எண்ணிக்கை 229 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 4 கொவிட் 19 மரணங்கள் நேற்று பதிவானதை அடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதன்படி கல்கிஸ்ஸையை சேர்ந்த 74 வயதான பெண்ணொருவர் கொவிட் 19 தொற்றால் உயிரிழந்தார்.

ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 7 ஆம் திகதி மரணித்துள்ளார்.

கொவிட் 19 நிமோனியா நிலை காரணமாக இந்த மரணம் சம்பவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் காத்தான்குடி பகுதியை சேர்ந்த 64 வயதான ஆண் ஒருவரும் கொவிட் 19 தொற்றால் உயிரிழந்தார்.

கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது கொவிட் 19 தொற்றுறுதியான நிலையில் ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் நேற்றைய தினம் அவர் உயிரிழந்ததுடன் கொவிட் 19 நிமோனியா நிலை இந்த மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் வெல்லம்பிட்டி பகுதியை சேர்ந்த 76 வயதான ஆண் ஒருவரும் கொவிட் 19 தொற்றால் மரணித்துள்ளார்.

ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்றைய தினம் உயிரிழந்ததுடன் கொவிட் 19 நிமோனியா நிலையுடன் இரத்தம் விசமானதால் இந்த மரணம் சம்பவித்துள்ளது.

இதேவேளை, ஓப்பநாயக்க பகுதியை சேர்ந்த 58 வயதான ஆண் ஒருவரும் கொவிட் 19 தொற்றால் மரணித்துள்ளார்.

அவரும் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முனதினம்; உயிரிழந்தார்.

கொவிட் 19 நிமோனியா நிலை காரணமாக அவர் மரணித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.