ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கு இனி தொடரப்பட மாட்டாது என அறிவிப்பு...!
தமிழ் தேசிய கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தினை கொலை செய்தமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையானுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை இனி தொடர விரும்பவில்லை என சட்ட மா அதிபர் திணைக்களம் மட்டக்களப்பு நீதிமன்றிலுக்கு இன்று அறிவித்துள்ளது