
இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்..
இன்றைய தினம் மேல், சபரகமுவ, வடமேல், மத்திய மாகாணங்கள் மற்றும் காலி மாத்தறை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதனிடையே குறித்த பிரதேசங்களில் 50 மில்லி மீட்டர் வரையிலான கடும் மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் அறிக்கை வெளிட்டுள்ளது.
இதேவேளை, மன்னார் தொடக்கம் புத்தளம் ஹம்பாந்தொட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற் பரப்பில் இடைக்கிடை கொந்தளிப்பாக காணப்பட கூடும் என்பதுடன், கடற் படையினர் மற்றும் மீனவர்கள் அது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.