
நாடாளுமன்றத்தை மூடுவதற்கு முடிவு எடுக்கப்படவில்லை - சபாநாயகர் தெரிவிப்பு...!
நாடாளுமன்றத்தை மூடுவதற்கு எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்று பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதை அடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், நாடாளுமன்ற பணிக்குழாமினருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.