இணையம் வாயிலாக பொதுநலவாய சபாநாயகர்கள் மாநாட்டில் பங்கேற்ற மஹிந்த யாப்பா அபேவர்தன...!

இணையம் வாயிலாக பொதுநலவாய சபாநாயகர்கள் மாநாட்டில் பங்கேற்ற மஹிந்த யாப்பா அபேவர்தன...!

பொதுநலவாய சபாநாயகர்கள் மற்றும் தலைமை தாங்கும் அதிகாரிகளின் மாநாட்டின் நிலையியல் குழுக்கூட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று இணையம் மூலம் கலந்துகொண்டார்.

ஆசியப் பிராந்திய பிரதிநிதியாக அவர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இது பொதுநலவாய சபாநாயகர்கள் மற்றும் தலைமை தாங்கும் அதிகாரிகளின் மாநாட்டின் நிலையியல் குழுவின் 25 வது மாநாடாகும்.

இந்த கூட்டத்தில் சபாநாயகருடன் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவும்; கலந்துகொண்டார்.

ஆபிரிக்கா, ஆசியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, கரீபியன், அட்லாண்டிக் மற்றும் அமெரிக்கா, மத்திய தரைக்கடல், இந்தியா, பசிபிக் மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகிய 9 பொதுநலவாய பிராந்தியங்களின் சபாநாயகர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் இனையம்; ஊடாக கலந்துகொண்டனர்.

கொவிட் 19 தொற்றுநோய் காரணமாக நிலையியல் குழுவின் இந்தக் கூட்டம் இனையம்; ஊடாக இடம்பெற்றது.

பொதுநலவாய சபாநாயகர்கள் மற்றும் தலைமை தாங்கும் அதிகாரிகளின் 26 வது மாநாடு அவுஸ்திரேலிய, கன்பரா நகரில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.