எதிர்வரும் மாதங்களில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகக் கூடும்...!
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களிலே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகக் கூடும் என தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அந்த பிரிவின் பணிப்பாளர் வைத்தியர அருண ஜயசேகர இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த காலப்பகுதியில் பருவப்பெயர்ச்சி மழை வீழ்ச்சி பதிவாவதன் காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 5 மாத காலப்பகுதியினுள் 21 ஆயிரத்திற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கொழும்பு, இரத்தினபுரி, கண்டி, காலி மாவட்டங்களிலே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த டெங்கு தொற்றாயளர்களின் எண்ணிக்கை குறைவழடந்துள்ளதாக தேசிய டெங்கு நோய் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.