சிகையலங்கார நிலையத்திற்கு சென்ற இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்..!!

சிகையலங்கார நிலையத்திற்கு சென்ற இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்..!!

மீட்டியாகொட பகுதியில் இளைஞர் ஒருவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 24-32 வயதுக்குட்பட்டவர்கள் என காவற்துறை தெரிவித்துள்ளது.

மேற்குறிப்பிடப்பட்ட கொலை சம்பவம் நேற்று முன்தினம் (26) இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் குறித்த பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர் மீட்டியாகொடவில் உள்ள சிகையலங்கார நிலையம் ஒன்றிற்கு சென்றிருந்த வேளையில் அங்கிருந்தவர்களுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக இவர் கொலை செய்யப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.