
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்ட கருத்து..
வானுர்தி நிலையம் திறக்கப்படும் பட்சத்தில் கொவிட் - 19 தொற்று மீண்டும் பரவக் கூடிய அச்சுறுத்தல் நிலவுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏப்ரல் 25 ஆம் திகதி முதல் இதுவரை சமூகத்தில் இருந்து எவருக்கும் கொரோனா தொற்றுறுதியாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றுலா பயணிக்களுக்காக திறப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அந்தப் பணிகள் மேலும் தாமதமாகாலம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விமான நிலையம் ஊடாக நபர்கள் வருவார்களாயின், அவர்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதே சிறந்த நடவடிக்கையாகும்.
தனிமைப்படுத்தலுக்கு உள்ளாவதாயின், சுற்றுலாத்துறையினர் வருகைத்தர மாட்டார்கள்.
எனவே, சுற்றுலாத்துறையை பாதுகாப்பதற்காகவும், சுற்றுலாத்துறையினர் மூலம் நாட்டு மக்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதை தவிர்ப்பதற்கும் வேறு வழிமுறைகளை பயன்படுத்த உள்ளதாக அவர் கூறினார்.
இந்தநிலையில், ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதியோ அல்லது அதன் பின்னரோ விமான நிலையம் திறக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்தள்ளார்.