அனைத்து திரையரங்குகளும் ஜூலை 02ஆம் திகதி ஆரம்பம்

அனைத்து திரையரங்குகளும் ஜூலை 02ஆம் திகதி ஆரம்பம்

நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளையும் எதிர்வரும் ஜூலை 02 ஆம் திகதி முதல் மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

திரையரங்குகள் சினிமா காட்சிகளுக்காக திறக்கப்பட்டாலும் சமூக இடைவெளியை கருத்திற்கொண்டு சுகாதார துறையினரின் வழிகாட்டலுக்கு இணங்க 50 விதமான ஆசனங்களில் அமர்வதற்கு மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாத நடுப்பகுதியில் நாட்டில் உள்ள அனைத்து சினிமா திரையரங்குகளும் தற்காலிகமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.