
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு பதிலடி கொடுத்துள்ளார் கருணா
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கு 18 வயதுக்கு குறைவான எவரும் தம்மால் இணைத்து கொள்ளப்படவில்லை என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
கருணா தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் இருந்த காலப்பகுதியில் சிறுவர்களை படையில் இணைத்து கொண்டமை உள்ளிட்ட அவரால் நடாத்தப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை கோரியுள்ளது.
இது குறித்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த இவர் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கு 18 வயதுக்கு குறைவான எவரும் தம்மால் இணைத்து கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ளார்.