நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்...!

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்...!

நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய ஊவா,வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் இவ்வாறு இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என கூறப்பட்டுள்ளது.

அதேபோல்,சப்ரகமுவ மாகாணத்தின் சில பகுதிகளிலும் காலி,மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பிற்பகல் 02 மணியளவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என கூறப்பட்டுள்ளது