
விஷ்ணு ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்ட மஹிந்த
ஸ்ரீலங்காவின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மோதரை விஷ்ணு ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொண்டுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நடைபெற இருக்கின்ற தேர்தல் மற்றும் நாட்டின் நன்மை கருதி பிரதமர் இன்றையதினம் காலையில் ஆலயத்திற்கு பிரசன்னமாகியிருந்தார்.
இந்நிகழ்வில் பிரதமர் உட்பட பல பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.