வாகன விபத்தில் 9 பேர் காயம்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பத்தேகம மற்றும் பின்னதுவ நுழைவாயிலுக்கும் அருகில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் 9 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் காலி - கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் அவர்களில் மூன்று பேரின் உடல்நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியாசலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த மகிழூர்ந்து ஒன்று சிற்றூந்து ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட வேளை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025