
சிறைச்சாலைகளில் மீண்டும் களமிறக்கப்படும் விசேட அதிரடிப்படையினர்!
இலங்கையின் சில சிறைச்சாலைகளில் மாத்திரம் மீண்டும் விசேட அதிரடிப் படையினரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக சிறைச்சாலை கடமைகளில் இருந்து அகற்றப்பட்டிருந்த பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் மீண்டும் குறித்த கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, முதற்கட்ட நடவடிக்கையாக கொழும்பு வெலிகட சிறைச்சாலை, கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலை மற்றும் மெகசின் சிறைச்சாலைகளில் அவர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர், சிறைச்சாலை அத்தியட்சகர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் சிறைச்சாலைகளினுள் கைதிகளை சோதனைக்குட்படுத்துதல் மற்றும் அதிகாரிகளை சோதனைக்கு உட்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் இன்று முதல் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.