
கொழும்பிலிருந்து சென்ற வாகனம் விபத்து - 9 பேர் படுகாயம் - 3 பேர் ஆபத்தான நிலையில்.
தெற்கு அதிகவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் காயமடைந்துள்ள நிலையில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பத்தேகம மற்றும் பின்னத்துவ நுழைவாயிலுக்கும் அருகில் இன்று மாலை விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த கார் ஒன்று சிற்றூந்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.