கருணா என அழைப்பதையே விரும்புகிறேன்... காணொளி
கொரோனாவை விட கொடியவன் கருணா என்பதனை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு அதற்கு பதில் வழங்கி சர்ச்சையில் சிக்கிக்கொண்டு குற்றப்புலனாய்வு பிரிவிலும் முன்னிலையாகி சாட்சியமளித்தவர் கருணா என அழைக்கப்படும் விநாகமூர்த்தி முரளிதரன்.
இவர் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் அங்கம் வகித்த போது இவருக்கு கருணா அம்மான் என பெயர் சூட்டப்பட்டது. இவர் குறித்த அமைப்பிலிருந்து தற்பொழுது விலகியிருந்தாலும் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தில் அழைக்கப்பட்ட கருணா அம்மான் என்ற பெயரே தற்பொழுதும் விருப்பமான ஒன்றாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.
சூரியன் எவ் எம் இல் ஒலிபரப்பான விழுதுகள் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அத்துடன் பொது மக்களும் குறித்த பெயர் கொண்டே தன்னை அழைக்க விரும்புகின்றனர் எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் அவர் தெரிவித்து கருத்து காணொளியாக கீழே தரப்படுகின்றது.