அரிசியின் விலை மேலும் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை!

அரிசியின் விலை மேலும் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை!

பண்டிகை காலம் அண்மிக்கின்ற போது அரிசியின் விலை மேலும் அதிகரிக்க கூடும் என அகில இலங்கை சிறு மற்றும் மத்திய அளவிலான அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெரும் போகத்தில் நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், பாரிய அளவிலான ஆலை உரிமையாளர்களும், நெல்லை கொள்வனவு செய்பவர்களும் கடந்த ஆண்டுகளைப்போல நெல்லை பதுக்கி வைக்கும் அபாயம் உள்ளதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அகில இலங்கை சிறு மற்றும் மத்திய அளவிலான அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பீ.கே ரஞ்சித் இதனை இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

அரிசி உற்பத்தியாளர்கள் சுமத்தும் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் விவசாயத்துறை இராஜாங்க அமைச்சின் செயலாளர் அனில் விஜேசிறியிடம் எமது செய்திச் சேவை வினவியது.

இதன்போது பதிலளித்த அவர், 3 இலட்சம் மெற்றிக் டன் அளவில் நெல் கொள்வனவு செய்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள விலைக்கேற்ப அதனை கொள்வனவு செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

எனவே, அரசிக்கான நிர்ணயவிலையினை வழங்க முடியும் என விவசாயத்துறை இராஜாங்க அமைச்சின் செயலாளர் அனில் விஜேசிறி குறிப்பிட்டார்.