
தேர்தல் தொடர்பில் நாளை இடம்பெறவுள்ள முக்கிய சந்திப்பு!
தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய கூட்டம் நாளை இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சந்திப்பின் போது வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பதா? இல்லையா? என்பது குறித்து இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இடம்பெறும் இந்த கூட்டத்தில் ஆணைக்குழுவின் மேலும் சில உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு ஒரு மணித்தியாலம் மேலதிகமாக வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. எனினும் இதுவரை இது தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.