
ஹட்டனில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 7 பேர் வைத்தியசாலையில்
ஹட்டனில் தேவாலயம் ஒன்றுக்கு அருகில் இன்று முற்பகல் 7 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகினர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தேவாலயத்தின் பிரதான நுழைவாயிலின் மேற்பகுதியில் இருந்த குளவிக் கூடு கலைந்துள்ளது.
இதன்போது, அங்கு நின்றிருந்த 7 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகினர்