ஸ்ரீலங்காவிலுள்ள சீனப்பிரஜைகளுக்கு தூதரகம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

ஸ்ரீலங்காவிலுள்ள சீனப்பிரஜைகளுக்கு தூதரகம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக பிரதமர், ஜனாதிபதி எடுத்த நடவடிக்கைகள், போராடிய வைத்தியர்கள் பொலிஸர், அரச ஊழியர்கள் முப்படையினர் என அனைவரது முயற்சியையும் வரவேற்பதாக கொழும்பிலுள்ள ஸ்ரீலங்காவுக்கான சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் தனது நாட்டுப் பிரஜைகளுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்றையும் விடுத்துள்ளது.

தனது டுவிட்டர் பக்கத்தினூடாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஸ்ரீலங்காவில் பிறப்பிக்கப்பட்டு இருந்த ஊரடங்குச்சட்டம் முழுமையாக நீக்கப்பட்டுள்ள நிலையில், இங்குள்ள சீனப் பிரஜைகள் அனைவரும் சுகாதார வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.