பிரதமர் மகிந்தவுடன் திரையரங்கத்திற்குச் சென்ற கோட்டாபய!

பிரதமர் மகிந்தவுடன் திரையரங்கத்திற்குச் சென்ற கோட்டாபய!

ஸ்ரீலங்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் ஒன்றினை தானும் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் இணைந்து விசேட காட்சியினை பார்த்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி,

“த நியுஸ் பேப்பர்” திரைப்படத்தின் விசேட காட்சியை பார்ப்பதற்கு நானும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் சென்றோம்.

கொழும்பு One Galleface - PVR திரையரங்கில் நேற்று (28) பிற்பகல் இத்திரைப்படம் திரையிடப்பட்டது.

சரத் கொத்தலாவல மற்றும் குமார திரிமாதுர ஆகியோரின் இணை இயக்கத்தில் உருவான “த நியுஸ் பேப்பர்” திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் அமைச்சர் பந்துல குணவர்தன, ரவிந்திர குருகே மற்றும் எச்.டி.பிரேமசிறி ஆகியோர் ஆவர்.

ஜூலை 02ஆம் திகதி முதல் நாடு முழுவதும் திரையரங்குகளில் “த நியுஸ் பேப்பர்” திரைப்படம் திரையிடப்படுவதுடன், அன்று காலை 10.30 முதல் காட்சியை இலவசமாக பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு சந்தர்ப்பமளிக்கப்படும்.

கொவிட் ஒழிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற சுகாதார ஊழியர் குழுவினர், முப்படையினர், பொலிஸ் மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் தமது உத்தியோகபூர்வ அடையாள அட்டையை பயன்படுத்தி ஒருமுறை இத்திரைப்படத்தை இலவசமாக பார்வையிட முடியும்.

எனது பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க, பிரதமரின் செயலாளர் காமினி செனரத் உள்ளிட்ட பலர் திரைப்படத்தின் விசேட காட்சியை பார்வையிட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்.