இறுதித் தீர்மானம் நாளை- தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

இறுதித் தீர்மானம் நாளை- தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

தேர்தலுக்கான வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பது தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு நாளை ஒன்றுக் கூடவுள்ளது.

 

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் இதனை எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

 

குறித்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் பலச்சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.

 

இந்த நிலையில் நாளைய பேச்சுவார்தையின் போது, தேர்தலை நடத்துவது தொடர்பான நிபந்தனைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.

 

ஏதிலிகளாக வந்த மக்களை கௌரமாக வாழ வைப்பதற்கான பயணத்தை தமது கட்சி ஆரம்பித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

 

புத்தளத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

தேர்தலின் போது வேட்பாளர் தொடர்பில் நன்கு அறிந்து கொண்ட பின்னர் அவருக்கு வாக்களிக்குமாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி ராதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

போர் நிறைவுக்கு வந்ததன் பின்னர் தமிழ் மக்கள் பெரும் அவலங்களை எதிர்நோக்கி வருவதாக வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

 

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.