இலங்கையில் கொரோனா தடுப்பூசிக்காக பணக்காரர்கள் செய்யும் செயல்! வைத்தியர் வெளியிட்ட தகவல்

இலங்கையில் கொரோனா தடுப்பூசிக்காக பணக்காரர்கள் செய்யும் செயல்! வைத்தியர் வெளியிட்ட தகவல்

COVID-19 தடுப்பூசியைப் பெறுவதில் சில பணக்கார வர்க்கத்தைச் சேர்ந்த நபர்கள் முயற்சிப்பதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

எனினும் தடுப்பூசி பட்டியலில் உள்ள படியே தாங்கள் கடமைகளைச் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

பணக்காரர்கள் சிலர் சுகாதார அதிகாரிகளிடம் தடுப்பூசிக்காக கோரிக்கை விடுத்த பல சம்பவங்கள் உள்ளன.

COVID-19 தடுப்பூசியைப் பெறுவதில் அவர்களின் செல்வாக்கைக் காட்ட முயற்சிக்கின்றனர்.

இதனால் முன்னுரிமை பட்டியலின் படி தங்கள் கடமைகளைச் செய்ய இயலாதுள்ளதாகவும் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி பெறுவதற்கான முறை கிடைக்கும் வரை அனைவருக்கும் பொறுமை இருக்க வேண்டும் என்று அவர் நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

"உண்மையில் தேவையற்ற கோரிக்கைகளை விடுப்பது நியாயமற்றது மற்றும் தடுப்பூசியை பெற சுகாதார அதிகாரிகளின் பின்னால் சுமையை அதிகரிக்க வேண்டாம்” என்றார்.

நாங்கள் தடுப்பூசி திட்டத்தை ஏற்கனவே தயார் செய்துள்ளோம், முன்னுரிமை குழுக்கள் உள்ளன. எனவே, தடுப்பூசி கட்டமைப்பிற்கு வெளியே நாங்கள் செயல்பட முடியாது என மேலும் கூறினார்.

தடுப்பூசி திட்டத்தை யாரிடமிருந்தும் தடுத்து நிறுத்தும் எண்ணம் இல்லை என்றும் அவர் கோடிட்டுக் காட்டினார்.

"அனைவருக்கும் தடுப்பூசி போடுவது மற்றும் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதே எங்கள் நோக்கம். எனவே, பொறுமையாக இருக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், ”என்று கூறினார்