நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைவதற்கான காரணம்

நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைவதற்கான காரணம்

கொரோனா வைரஸை கண்டறிவதற்கான பரிசோதனைகளை மட்டுப்படுத்துவதே, நாளாந்த கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்த எண்ணிக்கையில் பதிவாவதற்கு காரணமாகும் என மருத்துவ ஆய்வக நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவரான ரவி குமுதேஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்தியவுடன், நோயாளர் எண்ணிக்கை குறைவடையாது.

இரண்டாவது முறையும் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னரே, ஓரளவு பாதுகாப்பு கிடைக்கும்.

எனவே, முதலாவது முறை தடுப்பூசி செலுத்தப்பட்டு ஒருவார காலம் செல்லும்போது நாட்டில் நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடையாது.

சுகாதார அமைச்சினால் பரிசோதனைகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையானது, எதிர்காலத்தில் மோசமான பிரதிபலன்களை ஏற்படுத்தும் என மருத்துவ ஆய்வக நிபுணர்கள் சங்கத்தின் தலைவரான ரவி குமுதேஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு மாநாக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு, தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கைகள் இன்றைய நாளில் சில மையங்களில் இடம்பெற்றன.

தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளில், 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, முன்னிலை சோசலிசக் கட்சி உள்ளிட்ட தரப்பினர், இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டனர்.