பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிகை உயர்வு

பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிகை உயர்வு

கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 37 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 748 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 47 ஆக உள்ளது. இந்த நிலையில், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 288 ஆக குறைவடைந்துள்ளது.