
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2050ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளான நபர் இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பியவர் என தெரிவிக்கப்படுகிறது.