இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் இன்றைய தினத்தின் இதுவரையான காலப்பகுதிவரை மூன்று பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

 

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பங்களாதேஷிலிருந்து நாடு திரும்பிய இருவருக்கும், ஐக்கிய இராச்சியத்திலிருந்த நாடுதிரும்பிய ஒருவருக்கும்   கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 50 ஆக அதிகரித்துள்ளது.

 

கொவிட்-19 ஆல் பீடிக்கப்பட்டிருந்தவர்களில் மேலும் 37 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வீடுதிரும்பியுள்ளனர்.

 

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 748 ஆக அதிகரித்துள்ளது.

 

சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 291 ஆக அதிகரித்துள்ளது.

 

இதேவேளை, அனைத்து திரையரங்குகளையும் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் திறப்பதற்கும், நாடகங்களையும், அரங்க நிகழ்ச்சிகளையும் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

 

இதற்கமைய, ஆசன எண்ணிக்கையில் 50 வீதமானவர்;களுக்கு மாத்திரமே திரையரங்குகளில் உட்பிரவேசிக்க அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.