கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

நேற்று (09) முதல் இன்று (10) வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 304 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி சுட்டிக்காட்டியுள்ளது.

அவர்களிடையே 16 பேர் வௌிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பியவர்களாவர்.

எஞ்சிய 288 பேரில் அதிகளவான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் 58 பேரும் கொழும்பு மாவட்டத்தில் 29 பேரும் கண்டி மாவட்டத்தில் 18 பேரும் அம்பாறை மாவட்டத்தில் இருவரும் பதுளை மாவட்டத்தில் இருவரும் திருகோணமலை மாவட்டத்தில் நால்வரும் மன்னார் மாவட்டத்தில் 17 நபர்களும் நுவரெலியா மாவட்டத்தில் மூவரும் யாழ். மாவட்டத்தில் 12 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூவரும் புத்தளம் மாவட்டத்தில் 10 நபர்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 13 நபர்களும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.

கொழும்பு – வௌ்ளவத்தை பிரதேசத்தில் இருவர், பொரளையில் ஒருவர், மருதானையில் ஒருவர், புளூமென்டல் பகுதியில் இருவர், மட்டக்குளி பிரதேசத்தில் இருவர் அடங்கலாக கொழும்பு மாவட்டத்தில் 29 பேர் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தின் களனி பகுதியில் 20 பேருக்கும் வத்தளை பகுதியில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அம்பாறை – அக்கரைப்பற்று பகுதியில் ஒருவருக்கும் பொத்துவில் பகுதியில் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

நுவரெலியா – ஹட்டன் பகுதியில் ஒருவருக்கும் பொகவந்தலாவை பகுதியில் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தின் உடுவில் பிரதேசத்தில் 8 பேரும் மானிப்பாய் பகுதியில் நால்வரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதேசத்தில் 3 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில் இருவரும் கந்தளாய் பகுதியில் இருவரும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இன்று (10) காலை வரையில் நாட்டில் மொத்தமாக 86,343 தொற்றாளர்கள் பதிவாகியுள்ள அதேநேரம், 82,753 பேர் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனர்.

நேற்றைய தினம் (09) 04 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டன.

உடுவில், அக்குரணை, ஹொரபே மற்றும் ராகமை ஆகிய பகுதிகளை சேர்ந்த நால்வரே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர்.

இதன் பிரகாரம், நாட்டில் இதுவரை 511 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில், நாட்டில் நேற்றைய தினம் 6,694 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன