வீதி சட்டங்களை மீறி பயணித்த புதுமண தம்பதிக்கு கிடைத்த தண்டனை

வீதி சட்டங்களை மீறி பயணித்த புதுமண தம்பதிக்கு கிடைத்த தண்டனை

வீதி சட்டத்தை மீறி பயணித்த புதுமண தம்பதிக்கு 85 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் உத்தரவை மீறி கண்டி - மஹியங்கனை A-26 பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த புதுமணத் தம்பதிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

8 வீதி சட்டங்களை மீறியமை தொடர்பிலான குற்றச்சாட்டு காரணமாக 85 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதற்கு தெல்தெனிய மாவட்ட நீதமன்றத்தில் இன்றைய தினம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த திருமண தம்பதி கண்டி - மஹியங்கனை A-26 வீதியின் ஹுன்னஸ்கிரிய நகரத்திற்கு அருகில் வீதி சட்டத்தை மீறி பிரதான வீதியில் பயணித்த தம்பதியை பொலிஸார் பின் தொடர்ந்து சென்று கைது செய்துள்ளனர்.

தெஹிஅத்தகன்டிய பிரதேசத்தை சேர்ந்த இந்த திருமண தம்பதி, திருமாணத்தின் பின்னர் வீதியில் சவாரியில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த தம்பதிக்கு சாரதி அனுமதி பத்திரம் இல்லை என தெரியவந்துள்ளது. அத்துடன் இவர்கள் 8 போக்குவரத்து விதிகளை மீறியதாக பொலிஸார் பீ அறிக்கை மூலம் நீதிமன்றத்தில் தெரிவித்ததனர்.

இதனையடுத்து தெல்தெனிய நீதமன்றத்தினால் 85 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.