
கொவிட் 19 வைரஸை அடையாளப்படுத்தும் தானியங்கி PCR இயந்திரங்கள்
கொவிட் 19 வைரஸ் தொற்றை விரைவில் அடையாளப்படுத்தும் தானியங்கி பீ.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்களை அகில இலங்கை ரோடரி கழகம் அரச மருத்துவ அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளது.
குறித்த பீ.சி.ஆர் இயந்திரங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வொன்று நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.