கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது

கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது

கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் வரகாபொல பகுதியில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம் பகுதியை சேர்ந்த 41 வயதானவர் என காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

சந்தேக நபர் கொள்ளையிடுதல்,பெண்களின் கழுத்தில் உள்ள தங்க ஆபரணங்களை பறித்தல் உள்ளிட்ட பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் எனவும் காவல்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்