மாணவர் தொடர்பில் தகவல் தெரிந்தால் அறியத்தரவும்

மாணவர் தொடர்பில் தகவல் தெரிந்தால் அறியத்தரவும்

காணாமல் போயுள்ளதாக கூறப்படும் பம்பலப்பிட்டி – புனித பீட்டர்ஸ் கல்லூரியில் கல்வி பயிலும் 16 வயதான மாணவரை தேடும் பணிகளில் 4 காவல்துறை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இரத்மலானை – தஹம் மாவத்தை பகுதியை சேர்ந்த 11 தரத்தில் கல்வி பயிலும் குறித்த மாணவர் நேற்று முன்தினம் வீட்டிலிருந்து சென்றுள்ளார்.

எவ்வாறாயினும் அவர் இதுவரையில் வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவன் நேற்று முன்தினம் காலை 6.30 அளவில் மொரட்டுவை பகுதி நோக்கி பயணித்தமை சி.சி.ரி.வி காணொளி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் குறித்த மாணவன் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் 077 377 98 50 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துமாறு அவரது குடும்பத்தினர் கோரியுள்ளனர்