
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த மேலும் 36 பேர்..!
நாட்டில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 36 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இதுவரையில் இலங்கையில் 1,863 தொற்றாளர்கள் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.