சட்டமா அதிபர் மற்றும் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு இடையே சந்திப்பு

சட்டமா அதிபர் மற்றும் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு இடையே சந்திப்பு

சட்டமா அதிபர் தப்புல டி லிவேறாவுக்கும், காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று தற்சமயம் இடம்பெற்று வருகின்றது

கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதிக் காவல்துறைமா அதிபர் காரியாலயத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறுகின்றது.

பதில் காவல்துறைமா அதிபர் சி.டி.விக்ரமரட்ன இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளதுடன், சட்டமா அதிபர் தப்புல டி லிவேறா முற்பகல் 10.30 அளவில் அங்கு பிரசன்னமாகியதாக எமது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

குறித்த கலந்துரையாடலை அறிக்கையிடுமாறு முன்னதாக ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதும், ஊடகவியலாளர்களுக்கு அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

இதன் காரணமாக, கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதிக் காவல்துறைமா அதிபர் காரியாலயத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கும், ஊடகவியாவியலாளர்களுக்கும் இடையில் இதன்போது கருத்து முரண்பாடு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.