ஆட்ட நிர்ணய சதியில் கிரிக்கட் வீரர்களுக்கு பங்கு இல்லை...!

ஆட்ட நிர்ணய சதியில் கிரிக்கட் வீரர்களுக்கு பங்கு இல்லை...!

ஆட்ட நிர்ணய சதியில் கிரிக்கட் வீரர்களுக்கு பங்கு இல்லை என விளையாட்டில் இடம்பெறும் குற்றங்களை ஆராயும் குழுவின் பணிப்பாளரான சிரேஷ்ட காவல் துறை அத்தியட்சகர் ஜகத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் இந்திய அணியுடனான இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், விளையாட்டில் இடம்பெறும் குற்றங்களை ஆராயும் குழுவின் பணிப்பாளர் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இதற்கமைய, எதிர்காலத்தில் கிரிக்கட் வீரர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.