
வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை காலமானார்
மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் கலாநிதி, வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை தமது 80ஆவது வயதில் காலமானார்.
மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் இதனை எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
நீண்ட காலமாக சுகயீனமுற்று யாழ்ப்பாணம் திருச்சிலுவை கன்னியர் மருதமடு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவர் காலமானார்.
இராயப்பு ஜோசப் ஆண்டகையின் இறுதி சடங்கு தொடர்பான தகவல் பின்னர் அறிவிக்கப்படும் என மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் குறிப்பிட்டார்