
ஜிந்துபிட்டி கொரோனா தொற்றாளரின் குடும்பத்தினர் 10 பேருக்கு PCR சோதனையில் வெளியான தகவல்...!
கொட்டாஞ்சேனை - ஜிந்துபிட்டி பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் 154 பேர் கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டவர்களில் 50 பேருக்கு பீ சீ ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
எனினும் குறித்த 50 பேரும் மேலும் இருவாரங்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு பீ சி ஆர் பரிசோதனைக்குடுத்தப்பட்ட 50 பேரில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினர் 10 பேர் உள்ளடங்குவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.