அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைகள் செப்டெம்பர் 27ஆம் திகதி முதல் விசாரணைக்கு..!

அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைகள் செப்டெம்பர் 27ஆம் திகதி முதல் விசாரணைக்கு..!

விநாயமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மானை கைது செய்ய வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் செப்டெம்பர் மாதம்  27 ஆம் திகதி ஆரம்பிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கடுவெலை நகர சபை உறுப்பினரான போசெத் கலகே பத்திரனவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பேசிய கருணா அம்மான் யுத்த காலத்தின் போது ஆனையிறவில் வைத்து 02 அயிரம் இலங்கை இராணுவ வீரர்களை கொலை செய்த சம்பவத்திற்கு தாம் தலைமை தாங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவித்த இந்த கருத்தானது சமூகத்தில் பெரிதும் பேசப்பட்டு வந்ததுடன், அவரை கைது செய்ய வேண்டும் எனவும் பலர் குரல் எழுப்பி வந்தனர்.