வருமான வரி திணைக்களத்தின் பணிகள் மீண்டும் வழமைக்கு

வருமான வரி திணைக்களத்தின் பணிகள் மீண்டும் வழமைக்கு

தேசிய வருமான வரி திணைக்களத்தின் பணிகள் எதிர்வரும் திங்கட்கிழமையில் இருந்து வழமைக்கு திரும்பவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொவிட் 19 வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக திணைக்களத்தின் பணிகள் வரையறுக்கப்பட்டிருந்த நிலையில் வரி மதிப்பீடு உட்பட அது தொடர்பிலான பரிசீலனைகள் எதிர்வரும் திங்கட்கிழமையில் இருந்து வழமை நிலையில் முன்னெடுக்கப்படவுள்ளன.

சுகாதார சிபாரிசுகளுக்கு அமைவாக குறித்த பணியினை மேற்கொள்ளவுள்ளதாகவும் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.